அக்கா என்று அன்போடு எல்லாராலும் அழைக்கப்படும் கவிஞர் இரா.மீனாட்சி திருவாரூரில் பிறந்து விருதுநகரில் வளர்ந்தவர். கவியோகி சுத்தானந்த பாரதியாரின் உறவுவழி ஞானப் பெயர்த்தி முறை இவருடைய கவிதைக்கு ஊற்றாயிற்று. இளவயதிலேயே கவிதாதேவியின் அருள் பெற்று, தனது கவிச்சிறகுகளை விரித்துத் தன்னைக் கவிப்பறவையாக்கிக் கொண்டார்.
செங்கோட்டையில் இருந்தபோது தென் பொதிகை மலையில் காட்டுத்தீ பரவியதைக் கண்டு இக்கவிப்பறவை தனது தாத்தாவிடம், ‘மலையிலே தீ எரியுது! சிவனின் நெற்றிக்கண் தெரியுது’ என்று கவித்துவமாகச் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்து போனாராம் அவர். அதுதான் இப்பறவையின் முதல் கவிச்சிறகசைப்பு. அப்போது பறவை அக்கினிக் குஞ்சுதான்.
வாழ்க்கை மரமாகப் விருதுநகர்ப் பள்ளிக் கிளைகளில் தத்தித்திரிந்த கவிப்பறவை தனக்கான தமிழ்த்தருவைத் தேடியலைந்து கொண்டேயிருந்தது. கூடுதேடும் கல்வியாக மனையியல் இளங்கலை அறிவியல் (ஙி.ஷிநீ பிஷீனீமீ ஷிநீவீமீஸீநீமீ) கற்பதற்குக் கொங்கு நாடுதேடிச் சிறகுகளை விரித்தது. கவிவானம் வசப்படாத காலம் அது; எனினும் அவ்வப்போது வானத்தை வட்டமடிப்பதைத் தனது வழக்கமாகக் கொண்டிருந்தது. சிறுவாணியும் நொய்யலாறும் நீல மலைத்தொடர்களும் நிறைந்த கொங்கு மண்ணைச் சுற்றித் திரிந்தது கவிப்பறவை.
கவிவானம் வசப்படுவதற்கு முன்னாலேயே அப்பறவைக்கு சொல்வனம் வசப்பட்டுப் போனது. கோவை பூ.சா.கோ கலைக்கல்லூரி நாவலர் மன்றத்தால் வழங்கப் பெற்ற தங்கப்பதக்கம் அதன் சொல் வளமைக்கு நல்ல சான்று. தமிழ்கூரும் அரங்குகளில் இப்பறவை தவறாது கலந்து தன்தமிழ் சொல்லிற்று. இதன் தமிழ்கண்டு வியந்தவர்கள் தத்தம் குழுக்களில் இருக்கச் சொல்லிப் பறவைக்குத் தூதுகள் அனுப்பினர். பறவை கவிவானம் தேடும் தன்தாகத்தால் தமிழுக்காய்ப் போராடக் களமிறங்கியது.
தமிழ்மொழி கல்லூரியின் பயிலுமொழியாகவும், இறையுறையும் கோயில்களில் புகழ்மணந்து பாடவும் இப்பறவை விரும்பிற்று. தவத்திரு குன்றக்குடி அடிகளார், தவத்திரு பேரூர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார், டாக்டர் மு.அறம் ஆகியோர் இணைந்த கோவை சிந்தனை மன்றத்தில் இப்பறவை இணைந்து கொண்டது. ஊர்கள்தோறும் சென்று இக்கருத்துகளை முழங்கியது. மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் இக்கவிப் பறவையால் வசீகரிக்கப் பெற்றனர்.
தமிழகம் முழுதும் கூவித் திரிந்த பறவை மதுரையில் தமிழ்மொழியின் பெருமையை நிலைநாட்டப் போராளியாயிற்று. காந்திய மகரிஷி அருணாசலம், சிலம்புச் செல்வர் ம.பொ.சி போன்ற அறிஞர்களின் ஆசியோடு தனது கவிதை வானத்தைத் தேட முற்பட்டது.
கவிவானம் தொடுவதற்குக் கம்பமாகடலைக் கடக்க வேண்டி ‘தமிழ்க்கட’லை அடைந்து காரைக்குடி நந்தவனத்தில் சென்றமர்ந்தது. பேரறிஞர்களான, இராய.சொ., கி.வா.ஜ., அ.ச.ஞானசம்பந்தம், டாக்டர் எஸ்.இராமகிருஷ்ணன், பேரா.அ.சீனிவாசராகவன், கம்பன் அடிப்பொடி சா.கணேசன், திருச்சி பேரா.எஸ்.இராதாகிருஷ்ணன், புதுச்சேரி புலவர் அ.அருணகிரி போன்றோரிடமெல்லாம் தமிழ்ப்பாடம் முறையாகக் கற்றது இக்கவிப்பறவை.
மெல்லத் துலங்கியது கவிதை வானம். சிறகுகள் வலிமையாக “ஆகாசக் கைகள் என்னைத் தொட்டன/ நீவிய கையின் மந்திரமோ? / எனக்கும் சிறகுகள் முளைத்தன” (நெருஞ்சி) என்று கவிதை வானத்தில் இப்பறவையின் சிறகுகள் விரிந்தன. “சிவ்வென்று மேலேறிச் சிறகை விரித்துப் பறவைப் பறப்பில் பயிலும் உதிர் இறகு ஆமாம்... ஒவ்வோர் இறகும் ஒவ்வொரு பறவை” (சுடுபூக்கள்) என அனுபவம் கண்டு கொண்டது.
மரபை விட்டுவிட முடியாமலும், புதுக்கவிதை புரியாமலும் தவித்துக் கொண்டிருந்த அக்கால கட்டத்தில் மரபை விதைக்கும் புதுமையாக இப்பறவையின் படைப்புகள் விளங்கின. “கூவிப் பறந்தேன்/ காளியின் பிள்ளை/ சூரிய காலத்தின் ஜீவப் பிரகாசம்/ இன்னும் பறந்தேன்/ நீல ஆகாசத்தில்/ முத்தொளிர் நட்சத்திரக் கூட்டம்“ (சுடுபூக்கள்) எனத் தன்னைக் காளியின் பிள்ளையாக வரித்துக் கொண்டு சூரிய மண்டலத்தில் நட்சத்திரக் கூட்டங்களுக்கிடையே வலம் வந்தது அக்கவிப்பறவை.
அமரர் சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ பத்திரிகையில் அப்பறவையின் கவிதைகள் முதலில் பதியப் பெற்றன. இப்பறவையின் பறத்தலுக்கு முழுச் சுதந்திரம் தந்தது கண்ணதாசன் இலக்கிய இதழ். தொடர்ந்து கணையாழி, தீபம், நாணல், கவி, அன்னம்விடு தூது, ஓம்சக்தி போன்ற கவியிதழ்கள் இடந்தந்தன. பறவையின் முதல்தொகுப்பு நெருஞ்சியாக மலர்ந்தது.
வானத்தைத் தொட்டு விட்ட மகிழ்ச்சியில் ‘வானகம் இங்கு தென்படல் வேண்டும்’ என விரும்பிய கவிப்பறவை பூமிக்குத் திரும்பியது. பூமி வானம்போல் இல்லாததைக் கண்டு வருந்தியது அக்கவிப்பறவை. அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் நிறைந்த காலம் அது. பறவையின் கவிதைப் பதிவுகள் எங்கும் விடுதலையின் வேண்டல்கள் கொப்பளித்தன. எமெர்ஜென்சிக் காலத்தில் பாரதத் தலைவர் ஜெய்ப்பிரகாஷ் நாராயணன் குழுவினருடன் இணைந்து இரண்டாம் விடுதலைப் போருக்குத் தனது சிறகுகளையும் கவிதைகளையுமே ஆயுதமாகக் கொண்டு எழுந்தது கவிப்பறவை. சுதந்திர தாகம் அடங்கிடக் கூடுமோ?
விநோபாபாவேயின் ஆசிரமத்துச் சகோதரிகளுடன் இணைந்து எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும், கடையனுக்கும் கடைத்தேற்றம், கிராமம் வாழ்க - உலகம் வாழ்க (ஷெய் கிராம் ஷெய் ஷகத்) பூமி பொது, இறைவனுக்குச் சொந்தம், (ஸப் பூமி கோபால் கி) எனும் பதாதைகளோடு தமிழகம் முழுவதும் சர்வோதயப் பாதயாத்திரை மேற்கொண்டு தன் கவியால் முழங்கித் திரிந்தது. இதன்வழியாகத் தமிழகத்தையும் பாரதத்தையும் நன்றாகத் தரிசித்துக் கொண்டது இக்கவிப்பறவை. அன்றிருந்து ‘தமக்குத் தொழில் கவிதை’ என்றும் ‘ஊருக்குழைத்தல் யோக’மென்றும் தன் வாழ்க்கையைக் குறிக்கோளுடையதாக்கிக் கொண்டது அக்கவிப் பறவை. தன்னை வளர்த்த தன்னூர்ப் பெருந்தலைவர் கற்றுத் தந்த பெருநெறியது.
எழுத்து சமூகத்தோடு கலந்தபோது பல புதிய தரிசனங்கள் கிடைத்தன. மதுரை வாழ்வில் இலக்கிய சகோதரர்களாக கவிஞர் நா.காமராசன், கவிஞர் அபி ஆகியோரின் தோழமையுடன் தமிழ் இலக்கிய ஆளுமைகளை செறிவாகக் கற்றுக் கொண்டது அது. சௌந்தரா கைலாசத்தைத் தொடர்ந்து தமிழ்க் கவிதை உலகில் பெண் கவிஞராகப் புகுந்தவர் என்றும் முதல் பெண் புதுக்கவிஞர் என்றும் கவிக்கோ அப்துல் ரகுமான் இப்பறவையின் கவிமுகத்தைச் சிறப்புற அறிமுகப்படுத்துகிறார்.
“காலத்தின் கோளாறோ?/ காற்றோடு கண்ணேறோ?/ மண்ணுக்கு வந்தததாலே/ வழுக்கியது பன்னீர்ப்பூ” என்று தன் வெளிப்பாட்டை அழகுறப் பதிவு செய்திருக்கிறது கவிப்பறவை. அதன் முதற்சிறகு இது. மானுடத்தோடு இயைந்த இயற்கையும், பசுமையும், உலகமும் எப்போதும் பறவையின் எல்லாக் கவிதைகளிலும் இயல்பாக வெளிப்படும். தொடர்ந்து வந்தது சுடுபூக்கள்.
கூடுதேடி அலைந்தது கவிப்பறவை. அமெரிக்கப் பல்கலைக்கழகத்திலிருந்து ஆய்வுப் பணி கிடைத்தது. ஊர்சுற்றும் மறுவாய்ப்பு. கவிச்சிறகு விரித்து இலட்சிய வான்பறந்த இலக்கியப் பறவை தனக்கான கூட்டை ஸ்ரீஅன்னையின் கனவுலகான ஆரோவில் சர்வதேச நகரில் மாத்ரிமந்திர் ஆலமரத்தில் கண்டு கொண்டது. கவிக்கு வான் துணையாயிற்று. ஹாலந்து தேசத்து அண்டோனியஸ் வில்ஹில்மஸ் பீட்டர் வான் மேகன் அவர்களுடன் இல்லறத்தில் இணைந்தது பறவை. ‘தீபாவளிப் பகல்’ நூலின் பதிப்புரையில் இப்பதிவைக் கீழ்க்காணுமாறு வடித்துள்ளார் கவிஞர் மீரா.
“ஆரோவில் எனும் சர்வதேச நகரில் தம் கணவர் த்வான் வான்மேகனுடன் இணைந்து புதிய மனித சமுதாய அமைப்புப் பரிசோதனையில் ஈடுபட்டுள்ள இலட்சிய நங்கை இரா.மீனாட்சி. பணம், புகழ், பதவி- இவற்றை விட்டு விலகி சுதந்திரமான சுகாதாரமான சூழலில் வாழும் இவருக்கு வாழ்வின் ரகசியங்களையும் அனுபவங்களையும் புரிந்து கொள்ளக் கிடைத்த ஒரு நல்ல தோழி- கவிதை. நெருஞ்சி, சுடுபூக்கள் என்னும் இருதொகுதிகளுக்குப் பிறகு வெளிவரும் இக்கவிதைகள் ஆத்மாவின் காயங்களுக்கு மருந்தாக அமைபவை.”
ஊருடன் ஒத்து வாழவும், சேர வந்த செகத்தீராகவும், யாதும் ஊரே யாவரும் கேளிரெனவும், தாம் பெற்ற கவியின்பத்தை உலகுக்கே தந்து ‘வான்’புகழ் கொண்டது இக்கவிப்பறவை. உலகு கண்ட உவகையில் கூவிற்று. “கண்மாய்க்குள் கருவேல நிழல்கள் / வண்ண இறகுகள் இறகைத் தொட்டு / நதிமலைப் பறவைகள் கூட / முதிர்வேனில் மலர்களாய் / எங்களூர்க் கிளைகளில் பன்னாட்டுப் பேரவை/ மரம் வளர்த்தவர் வாழ்க” என்று பிரபஞ்சத்தையே மரமாக்கிக் கொண்டது.
ஊர் சுற்றித் திரிந்து நாடு சுற்றி அலைந்த கவிப்பறவை கண்டங்கள் சுற்றி உலகு வலம் வரத்தொடங்கியது. எங்கும் பிறப்பு / புதிது புதிதாய் / முடிவில்லா வண்ணங்களில் / வடிவங்கள் கூட்டங்கள் / எங்கும் பிறப்பு / குயிலின் கீதம் கிளையின் இருட்டில் / வயலில் மணிகள் புல்லின் தலையில் / சூரியக் கற்றை பூரண நிலவில் / பிறந்து / மறுபடி பிறந்து / முடிவில்லா வண்ணங்களில் / வடிவங்கள் கூட்டங்கள் / கலைஞன் கைகளில் / கற்பனைக் கலைகள் / பிறக்கும் பொழுதுகள் / ஓசையே இல்லாமல் / விழுதுகள் ஒருமைப்பட / தெய்வங்கள் பிறக்கவே செய்கின்றன / படைப்பவனைப் பிறப்பிக்கும் / உற்சாக மனிதனே / நீயே தாய் பிரம்மா (மறுபயணம்) எனத் தனது மறுபயணத்தின் தொடக்கத்தை இவ்வாறு முரசறைகிறது அக்கவிப்பறவை.
ஊர், நாடு, உலகு கண்டபின்னால் என்ன மிச்சம்? கவிப்பறவை தனக்குள் ஆழ்ந்தது கிடைத்தது கவிதையமிழ்து. சுவைத்தவர்க்குத் தெரியும். எங்கும் வெளி / பெரிய வெளியில் / சிறிய வெளி என்வீடு / வீட்டிற்குள் என் உடம்பு / அங்கும் வெளிதான் / வெளியில் பரவச ஒளியின் / எல்லையில்லாத நாட்டியம். (மறுபயணம்)
உலகத்தைத் தன்னுள் கொண்டு பிரபஞ்சத்தைக் கண்ட அனுபவத்தில் வெளிக்கிளர்ந்த கவிதைகளைப் போற்றத் தொடங்கியது அறிஞர் உலகம். பெற்ற பரிசுகளும் குவிந்த பாராட்டுகளும் எண்ணிவிடக் கூடியவைதான் என்றாலும் எண்ணத் தகுந்தவை. தான் வரைந்த நூல்கள் மட்டுமின்றி பிற தொகுப்பு நூல்களிலும் இப்பறவையின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. தரமான உலக இலக்கியங்களை வெளியிட்டு வரும் பெங்குவின் நிறுவனம் பதிப்பித்துள்ள ஆங்கிலக் கவிதை நூல்களில் பறவையின் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. கடந்த நான்காயிரம் வருட உலகக் கவிதை இயங்குதலைத் தொகுத்து அமெரிக்காவிலிருந்து வெளிவந்த கவிதைத் தொகுப்பில் இந்தப் பறவையின் கவிதை இடம் பெற்றுள்ளது.
தன்னைப் போலவே வானந்தொட விரும்பும் கவிதைப் பறவைகளையும் ஒருங்கிணைத்துக் ‘தமிழகத்துக் கவிஞர்கள் சந்திப்பு’ என்னும் நிகழ்ச்சியை நடத்தி தனது கூடான ஆரோவில்லில் நூல் வெளியிட்டுள்ளது. தன்னையும் தான்சார்ந்த சமூகத்தையும், உலகத்தையும், பிரபஞ்சத்தையும் தன் சிறகுகளாலேயே அரவணைக்கும் இக்கவிப் பறவை எந்த இயக்கத்திலும் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதில்லை. ஆனால், அதேவேளையில் தமிழ் வளர்க்கும், கவிபரப்பும் எல்லா இயக்கங்களுக்கும் தனது ஆதரவையும் அன்பையும் தொடர்ந்து நல்கி வருகிறது. இதனாலேயே இப்பறவையின் முகம் பன்முனைப்படுகின்றது. பல பரிமாணங்களை உள்ளடக்குகிறது. அல்லவை நீக்கி நல்லதைப் புலப்படுத்துகிறது. இதனால் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவரும் தன்புலத்துப் பறவையாக எண்ணிக் கொள்கின்றனர்.
“காந்திய மணங்கமழ கவிதை படைக்கும் கவிஞர்கள் சிலரே. அவர்களில் ஒருவர் கவிஞர் இரா. மீனாட்சி. அவரை அறிந்தவர்கள் ஆரோவில் அமைப்பில் குத்துவிளக்காய் அவர் சுடர் விடுவதை அறிவார்கள். இந்தக் ‘கொடிவிளக்கு’ மனிதநேயத்தை வளர்க்க வாழ்வியல் விழுமியங்களைச் செழிக்கச் செய்ய அவர் வழங்கும் சமுதாயக் கொடை” என்று காந்திய நோக்கில் அக்கவிப்பறவையை அடையாளம் கண்டு குறிப்பிடுகிறார் பேராசிரியர் முனைவர் மா.பா.குருசாமி.
கூடு பிறந்து, ஊர்கூடி, நாடேறி, கண்டங்கள் சுற்றி, உலகு தழுவி, பிரபஞ்சவெளியில் இன்றுவரை தனது கவிச்சிறகுகளை விரித்து உலாவி வருகிறது இக்கவிப்பறவை. இப்பறவையிடம் நான் கவிதை நீ எழுது எனக் கவிதை வந்து உடன் தழுவிக் கொள்வது அதன் கவித்தவத்திற்குத் தக்க சான்று. அதன் கவிப்பயணம் இனிதே காலங்காலமாகத் தொடரட்டும்.
செங்கோட்டையில் இருந்தபோது தென் பொதிகை மலையில் காட்டுத்தீ பரவியதைக் கண்டு இக்கவிப்பறவை தனது தாத்தாவிடம், ‘மலையிலே தீ எரியுது! சிவனின் நெற்றிக்கண் தெரியுது’ என்று கவித்துவமாகச் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்து போனாராம் அவர். அதுதான் இப்பறவையின் முதல் கவிச்சிறகசைப்பு. அப்போது பறவை அக்கினிக் குஞ்சுதான்.
வாழ்க்கை மரமாகப் விருதுநகர்ப் பள்ளிக் கிளைகளில் தத்தித்திரிந்த கவிப்பறவை தனக்கான தமிழ்த்தருவைத் தேடியலைந்து கொண்டேயிருந்தது. கூடுதேடும் கல்வியாக மனையியல் இளங்கலை அறிவியல் (ஙி.ஷிநீ பிஷீனீமீ ஷிநீவீமீஸீநீமீ) கற்பதற்குக் கொங்கு நாடுதேடிச் சிறகுகளை விரித்தது. கவிவானம் வசப்படாத காலம் அது; எனினும் அவ்வப்போது வானத்தை வட்டமடிப்பதைத் தனது வழக்கமாகக் கொண்டிருந்தது. சிறுவாணியும் நொய்யலாறும் நீல மலைத்தொடர்களும் நிறைந்த கொங்கு மண்ணைச் சுற்றித் திரிந்தது கவிப்பறவை.
கவிவானம் வசப்படுவதற்கு முன்னாலேயே அப்பறவைக்கு சொல்வனம் வசப்பட்டுப் போனது. கோவை பூ.சா.கோ கலைக்கல்லூரி நாவலர் மன்றத்தால் வழங்கப் பெற்ற தங்கப்பதக்கம் அதன் சொல் வளமைக்கு நல்ல சான்று. தமிழ்கூரும் அரங்குகளில் இப்பறவை தவறாது கலந்து தன்தமிழ் சொல்லிற்று. இதன் தமிழ்கண்டு வியந்தவர்கள் தத்தம் குழுக்களில் இருக்கச் சொல்லிப் பறவைக்குத் தூதுகள் அனுப்பினர். பறவை கவிவானம் தேடும் தன்தாகத்தால் தமிழுக்காய்ப் போராடக் களமிறங்கியது.
தமிழ்மொழி கல்லூரியின் பயிலுமொழியாகவும், இறையுறையும் கோயில்களில் புகழ்மணந்து பாடவும் இப்பறவை விரும்பிற்று. தவத்திரு குன்றக்குடி அடிகளார், தவத்திரு பேரூர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார், டாக்டர் மு.அறம் ஆகியோர் இணைந்த கோவை சிந்தனை மன்றத்தில் இப்பறவை இணைந்து கொண்டது. ஊர்கள்தோறும் சென்று இக்கருத்துகளை முழங்கியது. மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் இக்கவிப் பறவையால் வசீகரிக்கப் பெற்றனர்.
தமிழகம் முழுதும் கூவித் திரிந்த பறவை மதுரையில் தமிழ்மொழியின் பெருமையை நிலைநாட்டப் போராளியாயிற்று. காந்திய மகரிஷி அருணாசலம், சிலம்புச் செல்வர் ம.பொ.சி போன்ற அறிஞர்களின் ஆசியோடு தனது கவிதை வானத்தைத் தேட முற்பட்டது.
கவிவானம் தொடுவதற்குக் கம்பமாகடலைக் கடக்க வேண்டி ‘தமிழ்க்கட’லை அடைந்து காரைக்குடி நந்தவனத்தில் சென்றமர்ந்தது. பேரறிஞர்களான, இராய.சொ., கி.வா.ஜ., அ.ச.ஞானசம்பந்தம், டாக்டர் எஸ்.இராமகிருஷ்ணன், பேரா.அ.சீனிவாசராகவன், கம்பன் அடிப்பொடி சா.கணேசன், திருச்சி பேரா.எஸ்.இராதாகிருஷ்ணன், புதுச்சேரி புலவர் அ.அருணகிரி போன்றோரிடமெல்லாம் தமிழ்ப்பாடம் முறையாகக் கற்றது இக்கவிப்பறவை.
மெல்லத் துலங்கியது கவிதை வானம். சிறகுகள் வலிமையாக “ஆகாசக் கைகள் என்னைத் தொட்டன/ நீவிய கையின் மந்திரமோ? / எனக்கும் சிறகுகள் முளைத்தன” (நெருஞ்சி) என்று கவிதை வானத்தில் இப்பறவையின் சிறகுகள் விரிந்தன. “சிவ்வென்று மேலேறிச் சிறகை விரித்துப் பறவைப் பறப்பில் பயிலும் உதிர் இறகு ஆமாம்... ஒவ்வோர் இறகும் ஒவ்வொரு பறவை” (சுடுபூக்கள்) என அனுபவம் கண்டு கொண்டது.
மரபை விட்டுவிட முடியாமலும், புதுக்கவிதை புரியாமலும் தவித்துக் கொண்டிருந்த அக்கால கட்டத்தில் மரபை விதைக்கும் புதுமையாக இப்பறவையின் படைப்புகள் விளங்கின. “கூவிப் பறந்தேன்/ காளியின் பிள்ளை/ சூரிய காலத்தின் ஜீவப் பிரகாசம்/ இன்னும் பறந்தேன்/ நீல ஆகாசத்தில்/ முத்தொளிர் நட்சத்திரக் கூட்டம்“ (சுடுபூக்கள்) எனத் தன்னைக் காளியின் பிள்ளையாக வரித்துக் கொண்டு சூரிய மண்டலத்தில் நட்சத்திரக் கூட்டங்களுக்கிடையே வலம் வந்தது அக்கவிப்பறவை.
அமரர் சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ பத்திரிகையில் அப்பறவையின் கவிதைகள் முதலில் பதியப் பெற்றன. இப்பறவையின் பறத்தலுக்கு முழுச் சுதந்திரம் தந்தது கண்ணதாசன் இலக்கிய இதழ். தொடர்ந்து கணையாழி, தீபம், நாணல், கவி, அன்னம்விடு தூது, ஓம்சக்தி போன்ற கவியிதழ்கள் இடந்தந்தன. பறவையின் முதல்தொகுப்பு நெருஞ்சியாக மலர்ந்தது.
வானத்தைத் தொட்டு விட்ட மகிழ்ச்சியில் ‘வானகம் இங்கு தென்படல் வேண்டும்’ என விரும்பிய கவிப்பறவை பூமிக்குத் திரும்பியது. பூமி வானம்போல் இல்லாததைக் கண்டு வருந்தியது அக்கவிப்பறவை. அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் நிறைந்த காலம் அது. பறவையின் கவிதைப் பதிவுகள் எங்கும் விடுதலையின் வேண்டல்கள் கொப்பளித்தன. எமெர்ஜென்சிக் காலத்தில் பாரதத் தலைவர் ஜெய்ப்பிரகாஷ் நாராயணன் குழுவினருடன் இணைந்து இரண்டாம் விடுதலைப் போருக்குத் தனது சிறகுகளையும் கவிதைகளையுமே ஆயுதமாகக் கொண்டு எழுந்தது கவிப்பறவை. சுதந்திர தாகம் அடங்கிடக் கூடுமோ?
விநோபாபாவேயின் ஆசிரமத்துச் சகோதரிகளுடன் இணைந்து எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும், கடையனுக்கும் கடைத்தேற்றம், கிராமம் வாழ்க - உலகம் வாழ்க (ஷெய் கிராம் ஷெய் ஷகத்) பூமி பொது, இறைவனுக்குச் சொந்தம், (ஸப் பூமி கோபால் கி) எனும் பதாதைகளோடு தமிழகம் முழுவதும் சர்வோதயப் பாதயாத்திரை மேற்கொண்டு தன் கவியால் முழங்கித் திரிந்தது. இதன்வழியாகத் தமிழகத்தையும் பாரதத்தையும் நன்றாகத் தரிசித்துக் கொண்டது இக்கவிப்பறவை. அன்றிருந்து ‘தமக்குத் தொழில் கவிதை’ என்றும் ‘ஊருக்குழைத்தல் யோக’மென்றும் தன் வாழ்க்கையைக் குறிக்கோளுடையதாக்கிக் கொண்டது அக்கவிப் பறவை. தன்னை வளர்த்த தன்னூர்ப் பெருந்தலைவர் கற்றுத் தந்த பெருநெறியது.
எழுத்து சமூகத்தோடு கலந்தபோது பல புதிய தரிசனங்கள் கிடைத்தன. மதுரை வாழ்வில் இலக்கிய சகோதரர்களாக கவிஞர் நா.காமராசன், கவிஞர் அபி ஆகியோரின் தோழமையுடன் தமிழ் இலக்கிய ஆளுமைகளை செறிவாகக் கற்றுக் கொண்டது அது. சௌந்தரா கைலாசத்தைத் தொடர்ந்து தமிழ்க் கவிதை உலகில் பெண் கவிஞராகப் புகுந்தவர் என்றும் முதல் பெண் புதுக்கவிஞர் என்றும் கவிக்கோ அப்துல் ரகுமான் இப்பறவையின் கவிமுகத்தைச் சிறப்புற அறிமுகப்படுத்துகிறார்.
“காலத்தின் கோளாறோ?/ காற்றோடு கண்ணேறோ?/ மண்ணுக்கு வந்தததாலே/ வழுக்கியது பன்னீர்ப்பூ” என்று தன் வெளிப்பாட்டை அழகுறப் பதிவு செய்திருக்கிறது கவிப்பறவை. அதன் முதற்சிறகு இது. மானுடத்தோடு இயைந்த இயற்கையும், பசுமையும், உலகமும் எப்போதும் பறவையின் எல்லாக் கவிதைகளிலும் இயல்பாக வெளிப்படும். தொடர்ந்து வந்தது சுடுபூக்கள்.
கூடுதேடி அலைந்தது கவிப்பறவை. அமெரிக்கப் பல்கலைக்கழகத்திலிருந்து ஆய்வுப் பணி கிடைத்தது. ஊர்சுற்றும் மறுவாய்ப்பு. கவிச்சிறகு விரித்து இலட்சிய வான்பறந்த இலக்கியப் பறவை தனக்கான கூட்டை ஸ்ரீஅன்னையின் கனவுலகான ஆரோவில் சர்வதேச நகரில் மாத்ரிமந்திர் ஆலமரத்தில் கண்டு கொண்டது. கவிக்கு வான் துணையாயிற்று. ஹாலந்து தேசத்து அண்டோனியஸ் வில்ஹில்மஸ் பீட்டர் வான் மேகன் அவர்களுடன் இல்லறத்தில் இணைந்தது பறவை. ‘தீபாவளிப் பகல்’ நூலின் பதிப்புரையில் இப்பதிவைக் கீழ்க்காணுமாறு வடித்துள்ளார் கவிஞர் மீரா.
“ஆரோவில் எனும் சர்வதேச நகரில் தம் கணவர் த்வான் வான்மேகனுடன் இணைந்து புதிய மனித சமுதாய அமைப்புப் பரிசோதனையில் ஈடுபட்டுள்ள இலட்சிய நங்கை இரா.மீனாட்சி. பணம், புகழ், பதவி- இவற்றை விட்டு விலகி சுதந்திரமான சுகாதாரமான சூழலில் வாழும் இவருக்கு வாழ்வின் ரகசியங்களையும் அனுபவங்களையும் புரிந்து கொள்ளக் கிடைத்த ஒரு நல்ல தோழி- கவிதை. நெருஞ்சி, சுடுபூக்கள் என்னும் இருதொகுதிகளுக்குப் பிறகு வெளிவரும் இக்கவிதைகள் ஆத்மாவின் காயங்களுக்கு மருந்தாக அமைபவை.”
ஊருடன் ஒத்து வாழவும், சேர வந்த செகத்தீராகவும், யாதும் ஊரே யாவரும் கேளிரெனவும், தாம் பெற்ற கவியின்பத்தை உலகுக்கே தந்து ‘வான்’புகழ் கொண்டது இக்கவிப்பறவை. உலகு கண்ட உவகையில் கூவிற்று. “கண்மாய்க்குள் கருவேல நிழல்கள் / வண்ண இறகுகள் இறகைத் தொட்டு / நதிமலைப் பறவைகள் கூட / முதிர்வேனில் மலர்களாய் / எங்களூர்க் கிளைகளில் பன்னாட்டுப் பேரவை/ மரம் வளர்த்தவர் வாழ்க” என்று பிரபஞ்சத்தையே மரமாக்கிக் கொண்டது.
ஊர் சுற்றித் திரிந்து நாடு சுற்றி அலைந்த கவிப்பறவை கண்டங்கள் சுற்றி உலகு வலம் வரத்தொடங்கியது. எங்கும் பிறப்பு / புதிது புதிதாய் / முடிவில்லா வண்ணங்களில் / வடிவங்கள் கூட்டங்கள் / எங்கும் பிறப்பு / குயிலின் கீதம் கிளையின் இருட்டில் / வயலில் மணிகள் புல்லின் தலையில் / சூரியக் கற்றை பூரண நிலவில் / பிறந்து / மறுபடி பிறந்து / முடிவில்லா வண்ணங்களில் / வடிவங்கள் கூட்டங்கள் / கலைஞன் கைகளில் / கற்பனைக் கலைகள் / பிறக்கும் பொழுதுகள் / ஓசையே இல்லாமல் / விழுதுகள் ஒருமைப்பட / தெய்வங்கள் பிறக்கவே செய்கின்றன / படைப்பவனைப் பிறப்பிக்கும் / உற்சாக மனிதனே / நீயே தாய் பிரம்மா (மறுபயணம்) எனத் தனது மறுபயணத்தின் தொடக்கத்தை இவ்வாறு முரசறைகிறது அக்கவிப்பறவை.
ஊர், நாடு, உலகு கண்டபின்னால் என்ன மிச்சம்? கவிப்பறவை தனக்குள் ஆழ்ந்தது கிடைத்தது கவிதையமிழ்து. சுவைத்தவர்க்குத் தெரியும். எங்கும் வெளி / பெரிய வெளியில் / சிறிய வெளி என்வீடு / வீட்டிற்குள் என் உடம்பு / அங்கும் வெளிதான் / வெளியில் பரவச ஒளியின் / எல்லையில்லாத நாட்டியம். (மறுபயணம்)
உலகத்தைத் தன்னுள் கொண்டு பிரபஞ்சத்தைக் கண்ட அனுபவத்தில் வெளிக்கிளர்ந்த கவிதைகளைப் போற்றத் தொடங்கியது அறிஞர் உலகம். பெற்ற பரிசுகளும் குவிந்த பாராட்டுகளும் எண்ணிவிடக் கூடியவைதான் என்றாலும் எண்ணத் தகுந்தவை. தான் வரைந்த நூல்கள் மட்டுமின்றி பிற தொகுப்பு நூல்களிலும் இப்பறவையின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. தரமான உலக இலக்கியங்களை வெளியிட்டு வரும் பெங்குவின் நிறுவனம் பதிப்பித்துள்ள ஆங்கிலக் கவிதை நூல்களில் பறவையின் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. கடந்த நான்காயிரம் வருட உலகக் கவிதை இயங்குதலைத் தொகுத்து அமெரிக்காவிலிருந்து வெளிவந்த கவிதைத் தொகுப்பில் இந்தப் பறவையின் கவிதை இடம் பெற்றுள்ளது.
தன்னைப் போலவே வானந்தொட விரும்பும் கவிதைப் பறவைகளையும் ஒருங்கிணைத்துக் ‘தமிழகத்துக் கவிஞர்கள் சந்திப்பு’ என்னும் நிகழ்ச்சியை நடத்தி தனது கூடான ஆரோவில்லில் நூல் வெளியிட்டுள்ளது. தன்னையும் தான்சார்ந்த சமூகத்தையும், உலகத்தையும், பிரபஞ்சத்தையும் தன் சிறகுகளாலேயே அரவணைக்கும் இக்கவிப் பறவை எந்த இயக்கத்திலும் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதில்லை. ஆனால், அதேவேளையில் தமிழ் வளர்க்கும், கவிபரப்பும் எல்லா இயக்கங்களுக்கும் தனது ஆதரவையும் அன்பையும் தொடர்ந்து நல்கி வருகிறது. இதனாலேயே இப்பறவையின் முகம் பன்முனைப்படுகின்றது. பல பரிமாணங்களை உள்ளடக்குகிறது. அல்லவை நீக்கி நல்லதைப் புலப்படுத்துகிறது. இதனால் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவரும் தன்புலத்துப் பறவையாக எண்ணிக் கொள்கின்றனர்.
“காந்திய மணங்கமழ கவிதை படைக்கும் கவிஞர்கள் சிலரே. அவர்களில் ஒருவர் கவிஞர் இரா. மீனாட்சி. அவரை அறிந்தவர்கள் ஆரோவில் அமைப்பில் குத்துவிளக்காய் அவர் சுடர் விடுவதை அறிவார்கள். இந்தக் ‘கொடிவிளக்கு’ மனிதநேயத்தை வளர்க்க வாழ்வியல் விழுமியங்களைச் செழிக்கச் செய்ய அவர் வழங்கும் சமுதாயக் கொடை” என்று காந்திய நோக்கில் அக்கவிப்பறவையை அடையாளம் கண்டு குறிப்பிடுகிறார் பேராசிரியர் முனைவர் மா.பா.குருசாமி.
கூடு பிறந்து, ஊர்கூடி, நாடேறி, கண்டங்கள் சுற்றி, உலகு தழுவி, பிரபஞ்சவெளியில் இன்றுவரை தனது கவிச்சிறகுகளை விரித்து உலாவி வருகிறது இக்கவிப்பறவை. இப்பறவையிடம் நான் கவிதை நீ எழுது எனக் கவிதை வந்து உடன் தழுவிக் கொள்வது அதன் கவித்தவத்திற்குத் தக்க சான்று. அதன் கவிப்பயணம் இனிதே காலங்காலமாகத் தொடரட்டும்.